அன்று, ஏரியில் வேந்தனைக் கண்டதிலிருந்து ஒவ்வொரு நிகழ்வும் இலக்கியாவின் மனதுள் புரண்டு கொண்டிருந்தது. ஏறிய வேகத்தில் கடைசி இருக்கையில் சென்றமர்ந்தவள் நிமிர்ந்தால், அவளையே பார்த்திருந்தவன் நெற்றி மேலேறி என்னவென்று கேட்டது. இவள் ‘ஒண்ணுமில்ல’ என்ற அர்த்தத்தில் தலையாட்ட முதலே மின்னலாகக் கண்ணடித்து அவனைப் பார்த்த கவியின் பார்வையை பின்னால் திரும்ப வைத்துமிருந்தான்.
இலக்கியாவால் எதுவும் செய்ய முடியவில்லை. அப்படியே பார்த்துக்கொண்டிருந்தாள். முகத்தின் உணர்வுகளை மறைக்காதிருக்க அவளுள்ளம் பட்ட பாடு விபரிக்க முடியாததாகவிருந்தது. முகமெங்கும் குப்பென்று பூத்துவிட்ட வியர்வைத் துளிகள்!
“ஏய் இலக்கி, என்னடி உடம்புக்க ஏதாவது செய்யுதா என்ன?” கவிதான். வேந்தன் உள்க்கண்ணாடியால் பார்க்கவும் திரும்பினாளேயொழிய அவள் வேறெதையும் காணவில்லை.
எல்லார் பார்வையும் பின்னால் திரும்ப, இலக்கியினுள் பதற்றமேறியது.
“இல்ல இல்ல ஒண்ணும் இல்ல.” முகத்தை அழுந்த துடைத்தவள், “இலேசா வயிறு நோ மா, வேற ஒண்ணும் இல்ல.” முன்னாலிருந்த தாய்க்குக் கேட்கும் படி முணுமுணுத்தாள்.
வேந்தனுக்கோ சிரிப்பு! சமாளிக்க என்ன எல்லாம் சொல்லப் போறாள் என்று பார்க்கும் ஆர்வமும். “போகலாமா இல்ல...” கேட்படி திரும்பியவனை கணம் முறைத்துவிட்டாள். அதற்கும் அவன் நெற்றி மேலேறி இறங்கியது.
“போகலாம் தம்பி...அது ஒண்ணுமில்ல.” சுகுணா சொல்ல, முறுவலோடு வாகனத்தை எடுத்தானவன். அவர்களை முந்திக்கொண்டு பெரியவரின் மகன் கார் சென்றது.
முதலில், காரிலேயே நகரைச் சுற்றி வந்தார்கள். பொன்மஞ்சள் வெயில் வலு அதிகாரத்தோடு நகரைத் தழுவி நின்றது. அதன் தழுவலில் வெவ்வேறு நிறங்களில் எழுந்து நின்ற கட்டிடங்கள் தகதகவென மிளிர்ந்தன. அவற்றையெல்லாம் தோற்கடிக்கும் வகையில் ஆணவத்தோடு உயர்ந்து நின்றது ‘ஸ்டிராடொஸ்ஃபெயர் டவர்’ (Stratosphere Tower).
ஏற்கனவே வந்து போன இடமென்றாலும் பார்க்கத் தெவிட்டவில்லை, அந்நகரம்.
அப்படியே சென்று காரை நிறுத்திவிட்டு இறங்கியவர்கள் முதலில் ‘ப்ரீமொன்ட் ஸ்ட்ரீட்’ நோக்கி நடந்தார்கள்.
“இரவில இன்னும் வடிவா இருக்கும் என்ன?” முதல் முறையாக வரும் மாறன் கேட்க, “ஓம், ஆனா ஒரே இரவில எல்லாம் பார்க்கிறது எண்டா ஏலாத காரியம். அதுவும் விடிய நாம வெளிக்கிடவும் வேணும் எல்லா!” என்றான், வேந்தன்.
இப்படியே கதைத்தபடி சென்றவர்கள் எதிர்ப்பட்ட கடைகளுள்ளும் சென்று வந்தார்கள்.
“கவலைப்படாமல் என்ன வேணுமோ வாங்குங்க. வேற ஒரு வாகனம் ஒழுங்கு செய்யலாம்.” பரிகாசமாகச் சொன்ன வேந்தனை முறைத்தாள், இலக்கியா.
“இவர் பெரிய ட்ரவல்ஸ் ஒனராம் எங்களுக்கு வாகனம் ஒழுங்கு செய்து தரப்போறாராம்.” பட்டென்று சொல்லிவிட்டவள், சட்டென்று திரும்பிய வினித்தின் பார்வையில், ‘அடியேய் இலக்கி! உனக்கு வாய் சும்மா இராதா?’ தன்னைத்தானே குட்டிக்கொண்டாள்.
அவன், அவளைப் பார்த்த வேகத்தில் வேந்தனிடம் திரும்பினான்.
அவனோ, விழிகளும் உதடுகளும் இணைந்து நகைக்க நின்றிருந்தான்.
“சொன்னாலும் சொல்ல இல்லையெண்டாலும் அதான்டி மண்டு உண்ம!” கவி. பகிடியாகச் சொன்னாளா இல்லை கடிந்து கொண்டாளா என்றே தெரியாதபடி சொன்னவள், தங்கையை இழுத்துக்கொண்டு முன்னாலிருந்த கடைத்தொகுதியினுள் நுழைந்துவிட்டாள்.
அவர்களையே தொடர்ந்த வேந்தனின் பார்வையை அவதானித்தபடி நெருங்கினான், வினித்.
“டோய் அண்ணா, உண்மையாவே டிரைவர் அவசரத்துக்குக் கிடைக்கேல்ல எண்டுதான் இந்த ட்ரிப் வந்தியா இல்ல...வேற...” இழுத்தவன் விழிகளில் விசமம்.
சற்றே தள்ளி மாறனோடு கதைத்தபடி நின்ற நாதனை நாடிவிட்டு வினித்திடம் திரும்பிய வேந்தனின் பார்வையிலும் நகைப்பே!
“உனக்கு வேற வேல இல்லையோ! தேவையில்லாமல் கற்பனை பண்ணாத சரியா!” முதுகில் தட்டினான்.
சமாளிக்கிறான் என்பது வெளிப்படையாகவே தெரிந்ததில் வினித் முகத்தில் சுவாரசியம் அதிகமானது. அதை உணர்ந்துகொண்ட வேந்தன், “அப்ப நாளைக்கு எங்களோட கிராண்ட் கண்யன் வாறியா?” கதையை மாற்றிவிட்டான்.
“வர ஆசைதான், ஆனா வேலைகளும் கிடக்கு.” இழுத்தான், அவன்.
“வேலை எந்த நாளும் தானே இருக்கு! எங்களுக்கும் தான் இருக்கு, நாங்க லீவு எடுக்கேல்லையா? அப்பிடி லீவு போடுங்க வினித்! நாளைக்கு நீங்களும் வாறிங்க!” என்றபடி வந்த வினித்தின் வருங்காலத் துணை, “நீங்களும் உள்ள வாங்கவன்.” வினித்தை அழைக்க, “அண்ணா நீங்களும் வாங்கவன், எப்பிடியும் இருளத்தான் வோட்டர் பொன்டெயின்ஸ், வல்கானோ ஷோ ரெண்டுக்கும் போகலாம்.” என்றபடி நகர, “பரவாயில்ல நீங்க போயிட்டு வாங்க.” என்றுவிட்டு வெளியில் நின்றுகொண்டான், அவன்.
அவனுக்கும் உள்ளே செல்ல ஆசைதான். இலக்கியாவுக்கு எதையாவது வாங்கிக் கொடுக்கவும். ஆனால், இம்முறை அவளோடு சேர்ந்து அவள் விருப்புக்கு வாங்கிப் பரிசளிக்கவே மனம் ஆசை கொண்டது. அதற்கு இது சமயம் அல்லவே! அதனால், பேசாது நாதன் ஆட்களோடு நின்று கொண்டான்.
இலக்கியாவால் எதுவும் செய்ய முடியவில்லை. அப்படியே பார்த்துக்கொண்டிருந்தாள். முகத்தின் உணர்வுகளை மறைக்காதிருக்க அவளுள்ளம் பட்ட பாடு விபரிக்க முடியாததாகவிருந்தது. முகமெங்கும் குப்பென்று பூத்துவிட்ட வியர்வைத் துளிகள்!
“ஏய் இலக்கி, என்னடி உடம்புக்க ஏதாவது செய்யுதா என்ன?” கவிதான். வேந்தன் உள்க்கண்ணாடியால் பார்க்கவும் திரும்பினாளேயொழிய அவள் வேறெதையும் காணவில்லை.
எல்லார் பார்வையும் பின்னால் திரும்ப, இலக்கியினுள் பதற்றமேறியது.
“இல்ல இல்ல ஒண்ணும் இல்ல.” முகத்தை அழுந்த துடைத்தவள், “இலேசா வயிறு நோ மா, வேற ஒண்ணும் இல்ல.” முன்னாலிருந்த தாய்க்குக் கேட்கும் படி முணுமுணுத்தாள்.
வேந்தனுக்கோ சிரிப்பு! சமாளிக்க என்ன எல்லாம் சொல்லப் போறாள் என்று பார்க்கும் ஆர்வமும். “போகலாமா இல்ல...” கேட்படி திரும்பியவனை கணம் முறைத்துவிட்டாள். அதற்கும் அவன் நெற்றி மேலேறி இறங்கியது.
“போகலாம் தம்பி...அது ஒண்ணுமில்ல.” சுகுணா சொல்ல, முறுவலோடு வாகனத்தை எடுத்தானவன். அவர்களை முந்திக்கொண்டு பெரியவரின் மகன் கார் சென்றது.
முதலில், காரிலேயே நகரைச் சுற்றி வந்தார்கள். பொன்மஞ்சள் வெயில் வலு அதிகாரத்தோடு நகரைத் தழுவி நின்றது. அதன் தழுவலில் வெவ்வேறு நிறங்களில் எழுந்து நின்ற கட்டிடங்கள் தகதகவென மிளிர்ந்தன. அவற்றையெல்லாம் தோற்கடிக்கும் வகையில் ஆணவத்தோடு உயர்ந்து நின்றது ‘ஸ்டிராடொஸ்ஃபெயர் டவர்’ (Stratosphere Tower).
ஏற்கனவே வந்து போன இடமென்றாலும் பார்க்கத் தெவிட்டவில்லை, அந்நகரம்.
அப்படியே சென்று காரை நிறுத்திவிட்டு இறங்கியவர்கள் முதலில் ‘ப்ரீமொன்ட் ஸ்ட்ரீட்’ நோக்கி நடந்தார்கள்.
“இரவில இன்னும் வடிவா இருக்கும் என்ன?” முதல் முறையாக வரும் மாறன் கேட்க, “ஓம், ஆனா ஒரே இரவில எல்லாம் பார்க்கிறது எண்டா ஏலாத காரியம். அதுவும் விடிய நாம வெளிக்கிடவும் வேணும் எல்லா!” என்றான், வேந்தன்.
இப்படியே கதைத்தபடி சென்றவர்கள் எதிர்ப்பட்ட கடைகளுள்ளும் சென்று வந்தார்கள்.
“கவலைப்படாமல் என்ன வேணுமோ வாங்குங்க. வேற ஒரு வாகனம் ஒழுங்கு செய்யலாம்.” பரிகாசமாகச் சொன்ன வேந்தனை முறைத்தாள், இலக்கியா.
“இவர் பெரிய ட்ரவல்ஸ் ஒனராம் எங்களுக்கு வாகனம் ஒழுங்கு செய்து தரப்போறாராம்.” பட்டென்று சொல்லிவிட்டவள், சட்டென்று திரும்பிய வினித்தின் பார்வையில், ‘அடியேய் இலக்கி! உனக்கு வாய் சும்மா இராதா?’ தன்னைத்தானே குட்டிக்கொண்டாள்.
அவன், அவளைப் பார்த்த வேகத்தில் வேந்தனிடம் திரும்பினான்.
அவனோ, விழிகளும் உதடுகளும் இணைந்து நகைக்க நின்றிருந்தான்.
“சொன்னாலும் சொல்ல இல்லையெண்டாலும் அதான்டி மண்டு உண்ம!” கவி. பகிடியாகச் சொன்னாளா இல்லை கடிந்து கொண்டாளா என்றே தெரியாதபடி சொன்னவள், தங்கையை இழுத்துக்கொண்டு முன்னாலிருந்த கடைத்தொகுதியினுள் நுழைந்துவிட்டாள்.
அவர்களையே தொடர்ந்த வேந்தனின் பார்வையை அவதானித்தபடி நெருங்கினான், வினித்.
“டோய் அண்ணா, உண்மையாவே டிரைவர் அவசரத்துக்குக் கிடைக்கேல்ல எண்டுதான் இந்த ட்ரிப் வந்தியா இல்ல...வேற...” இழுத்தவன் விழிகளில் விசமம்.
சற்றே தள்ளி மாறனோடு கதைத்தபடி நின்ற நாதனை நாடிவிட்டு வினித்திடம் திரும்பிய வேந்தனின் பார்வையிலும் நகைப்பே!
“உனக்கு வேற வேல இல்லையோ! தேவையில்லாமல் கற்பனை பண்ணாத சரியா!” முதுகில் தட்டினான்.
சமாளிக்கிறான் என்பது வெளிப்படையாகவே தெரிந்ததில் வினித் முகத்தில் சுவாரசியம் அதிகமானது. அதை உணர்ந்துகொண்ட வேந்தன், “அப்ப நாளைக்கு எங்களோட கிராண்ட் கண்யன் வாறியா?” கதையை மாற்றிவிட்டான்.
“வர ஆசைதான், ஆனா வேலைகளும் கிடக்கு.” இழுத்தான், அவன்.
“வேலை எந்த நாளும் தானே இருக்கு! எங்களுக்கும் தான் இருக்கு, நாங்க லீவு எடுக்கேல்லையா? அப்பிடி லீவு போடுங்க வினித்! நாளைக்கு நீங்களும் வாறிங்க!” என்றபடி வந்த வினித்தின் வருங்காலத் துணை, “நீங்களும் உள்ள வாங்கவன்.” வினித்தை அழைக்க, “அண்ணா நீங்களும் வாங்கவன், எப்பிடியும் இருளத்தான் வோட்டர் பொன்டெயின்ஸ், வல்கானோ ஷோ ரெண்டுக்கும் போகலாம்.” என்றபடி நகர, “பரவாயில்ல நீங்க போயிட்டு வாங்க.” என்றுவிட்டு வெளியில் நின்றுகொண்டான், அவன்.
அவனுக்கும் உள்ளே செல்ல ஆசைதான். இலக்கியாவுக்கு எதையாவது வாங்கிக் கொடுக்கவும். ஆனால், இம்முறை அவளோடு சேர்ந்து அவள் விருப்புக்கு வாங்கிப் பரிசளிக்கவே மனம் ஆசை கொண்டது. அதற்கு இது சமயம் அல்லவே! அதனால், பேசாது நாதன் ஆட்களோடு நின்று கொண்டான்.